Wednesday 6 May 2009

மனதோடு மழைக்காலம்


எல்லாரும் போல சிவாவும் காலேஜ் போகும் பொது, காலேஜ் படத்துல காட்டுற மாதிரி ஜாலிய இருக்கும்னு நினச்சுகிட்டு வீட்ல இருந்து கிளம்பினான் ..

First day
காலேஜில் எந்த நாளும் சீக்கிரம் வந்தது கிடையாது .. முதல் நாளே லேட்டாக தான் போக முடிஞ்சது..! First hour தமிழ் கிளாஸ்.. நம்ம வாத்தியாரு கொஞ்ச நேரம் ஏற இறங்க பாத்துட்டு சொன்னாரு ..
"மொத நாளே கிளாசுக்கு லேட்ட வர..!"
"sorry சார்..! பஸ் கிடைக்கல சார்..!"
"சரி சரி இப்படி எல்லாம் இனிவந்தா வெளிய தான் நிக்கணும் ..! உள்ள போ..!"
உன்ன போன பிறகு எல்லா பய மூஞ்சிய பாத்த எதோ ஜெயில் ல இருந்து தப்பிச்சு வந்த மாதிரி இருந்தனுங்க..! என்ன பண்றது ..!
பக்கத்துல ஒருத்தன் கேட்டான்
"பாஸ்..! பேனா இருக்கா?"
"இல்ல பாஸ்..! என்கிட்டே ஒன்னு தான் இருக்கு..!"
"இல்ல.. அந்த பொண்ணுக்கு pen வேணுமா..! அதான் கேட்டேன்..!"
"அவங்களுக்கு இருக்கட்டும் ..! மோதல உங்ககிட்ட pen இருக்கா? "
"என்ன பாஸ்.. இப்படி கேட்டுடிங்க.. நாங்கலாம் pen இல்லாம நோட்ஸ் எடுக்கிறவங்க.."
"அது எப்படி பாஸ்..!"
"நாங்க நோட்ஸ் எடுத்தா தான..! நாங்க pennidam தான் நோட்ஸ் புக்ஸ் எல்லாம் வாங்குறோம்..! ஆனா pen வாங்குறது இல்ல..! " என்று ஒரு பெரிய மொக்கை ஒன்று சொல்லி அவனே சிரித்து கொண்டான்.
பிறகு அவன் தொடர்ச்சியாக பல மொக்கை ஜோக்குகளை அள்ளி வீசினான்..
அப்பவே இந்த பெஞ்ச காலி பண்றா னு என் மனசு சொல்லிச்சு .. அவன்தான் சரி மொத நாள் தானேனு இருந்துட்டான்.But இவன் எப்பவும் இப்படி தான் என்று அப்பறமா தான் தெரிஞ்சது அவனுக்கு ..!

மத்தியம் லஞ்ச் பிரேக் …

புது காலேஜ் .. புது ஆளுங்க ..! எவன்கூட சாபிடுறது ..! குழம்பினான் சிவா.
சுற்றும் முற்றும் பார்த்த பொழுது.. அந்த மொக்கை கம்பெனி கிடைக்காமல் அலைந்தது தெரிந்தது..!

"ஆஹா ..! இவன்கிட்ட சிக்குனா சாப்பிட சாப்பட்ட எல்லாம் வெளிய கொண்டுவந்துருவன்.. ஓடிருவோம்..!" என்று ஓட ஆரம்பித்த பொழுது அவன் குரல் கொடுப்பது தெரிந்தது.

"பாஸ்..! வாங்க சாப்பிடுவோம்..!"

"இல்ல பாஸ். நீங்க சாப்பிடுங்க. நான் சாபிட்டாச்சு.. இது காலி tiffen box..!"

"அப்படியா..பரவல.. வாங்க என் tiffen இருக்கு .. ஷேர் பண்ணிக்கலாம் ..!"

"இல்ல பாஸ்..! நான் இன்னைக்கு உண்ணா விரதம்..!" என்று சொல்லி ஓட ஆரம்பித்தான்.

பிறகு மதியம் தூக்கத்திலே கழிந்தது..!

சாயங்காலம் வீட்டுக்கு கிளம்ப நான் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தேன்.. அவன் அங்கு வந்தான்..

"நீங்க எந்த ஏரியா ?"

"சுபிரமணிபுரம்"

"நீங்க?"

"அட நீங்க நம்ம ஏரியா வா ?"

"ரொம்ப நல்லதா போச்சு..! அப்பா தினமும் நாம சேர்ந்தே காலேஜ் வந்துருவோம்..! "

(என்னது தினமுமா?..! அட கடவுளே மொத வீட்டுக்கு போன பிறகு அப்பா கிட்ட சொல்லி வீட்ட காலிபன்ன சொல்லணும் ..!)

"இல்ல பாஸ் ..! நான் சீக்கிரம் கிளம்பிருவேன்..!" சிவா சொன்னான்.

"எப்ப கிளபன்னும்னு சொல்லுங்க நான் ரெடியா இருப்பேன்..!"

(சரி இவன் கிட்ட பேசி ஜெயிக்க முடியாது..!)

"ஓகே..! நாம போகலாம்..!"

"பாஸ் நா நல்ல ஜோக் சொல்லுவேன்..! கேக்குறிங்களா?"

"என்னது ஜோக்கா? நோ..! "

நல்ல வேளை எங்க பாஸ் வந்தது. அவன் முன்னாடி ஏறி கொண்டான் ..!

"ஒரு தெற்கு வாசல் குடுங்க.."

அப்பொழுது ஒரு குரல்

"ப்ளீஸ் .. ப்ளீஸ்.. ஒரு கீழவாசல் வாங்குங்க ,,! ஸ்டாப் வரபோகுது..இந்தாங்க காசு"

அப்பொழுது தான் அவளை பார்த்தான் சிவா..

-தொடரும்


No comments:

Post a Comment