Wednesday 6 May 2009

இயற்கையை ரசித்து வியந்த அனுபவம் உங்களுக்கு உண்டா ?இல்லை என்று யாரும் சொல்ல மாட்டிர்கள்..!
இதோ என் முதல் பிம்பம்.. இந்த இயற்கை கண்ணாடியில்;

"மழை"


"வேற வேல இல்ல இதுக்கு..!.
பொழுது விடிஞ்ச போதும் வந்துருது…" என்று சிலசமயம் புலம்புவார்கள் பலர்.. ஆனால் மழையோ கோவப்பட்டு கொஞ்ச நாள் டாடா காட்டிவிட்டால் "எப்ப பாத்தாலும் வெயில் அடிக்குது ..! மழை பெஞ்ச என்ன..!" என்று புலம்புவார்கள். மனுஷ புத்தி இது தான…! இந்த மழை என் வாழ்கையில் இதுவரை எப்படியெல்லாம் விளையாடுதுனு நா இப்ப எழுத போறேன் ..!

மழையில் நனைந்து வீடு வந்து சேர்ந்த அனுபவம் எல்லாருக்கும் இருக்கும். அதுவும் சின்ன வயசுல ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வரும் பொழுதுதான் இப்படி நடக்கும் ..! புத்தகம் எல்லாம் மழைல நனஞ்சு நாஸ்தி ஆயிடும் ..! நான் சின்ன பய்யன இருக்கும் பொழுது இப்படித்தான் ஒரு நாள் நல்ல மழை.. நாளைக்கு chemistry,physics னு எல்லா சார் பயலுகளும் exam வச்சுட்டாங்க . அதுவும் இல்லாம Practical note ரெடி பண்ணனுமம்.ஸ்கூல் முடிஞ்ச பிறகு உடனே வீட்டுக்கு கிளம்பிட்டேன் போற வழியிலே மழை தூர ஆரம்பிச்சுடுச்சு..!சரி எப்படியாவது வீட்டுக்கு போகணும் னு ஓட ஆரம்பிச்சேன் ..! மழை தன்னோட வேலைய காட்ட ஆரபிச்சுருசு. நட ரோட்ல ஓட ஆரம்பிச்சேன் ..! இந்த வண்டி காரங்க பண்ற அட்டகாசம் தாங்க முடியாது … நல்லா பள்ளமா பாத்து வண்டிய விடுவாங்க அப்ப அங்க தேங்குன மழை தண்ணி எல்லாம் வர்றவன் போறவன் உடம்புல அடிக்கும் ..இப்படி தான் நானும் பயந்து பயத்து ஓரமா போகும் பொழுது எப்படியோ ஒரு படுபாவி என் மேல தண்ணிய ஊத்திட்டான்..! சரி முழுசா நனஞ்ச பிறகு முக்காடு எதுக்கு னு மழைல நடக்க ஆரபிச்சேன் ..! வீடு வந்து சேரும் பொழுது மணி 6.30 . அடடா எக்ஸாம்கு படிகனுமே னு வேகமா டிரஸ் change பன்னி என் பைய்ய திறந்து பார்தேன் .. ! அட கடவுளே ..! எங்க ஊரு தெப்பகுளத்துல கூட இவ்வளவு தண்ணி நான் பார்த்தது இல்ல ..! தலைல கையா வச்சு உக்காந்துட்டேன் ..! அப்ப என் முதுகுல டமால் னு ஒரு அடி ..! திரும்பி பார்த்த என் அப்பா..! " என்ட இப்படியா மழையில நனஞ்சு வீட்டுக்கு வர்றது ..! இப்ப பாரு புக்ஸ் எல்லாம் என்ன ஆச்சுன்னு ..! புது புக் எல்லாம் வாங்கி குடுக்க முடியாது இத வச்சு படிகிறதுனா படி இல்ல எங்காச்சும் போயி மாடு மேயி ..!"
நான் ஒண்ணும் பேச முடியாமல் books எல்லாம் remove பன்னி காயவச்சு.. அப்பா அப்பப்பா. ..

அப்ப தான் ஒரு அற்புதமான காட்சிய பாத்தேன்.. என் Practical நோட் fulla மழைல நனஞ்சு கிலுஞ்சு போச்சு ..! 15 exercise எழுதி சார் கிட்ட sign வாங்குனது அது ..! நாளைக்கு வேற Practical எக்ஸாம் நான் செத்தேன் ..!




மழை - பகுதி 2


அந்த கிலுஞ்ச practical நோட்டை கொஞ்ச நேரம் பாத்துகிட்டே என்ன பண்றது னு தெரியாம கிறுக்கன் மாதிரி உட்க்காந்து இருந்தேன்..! சரி இப்படியே இருந்த நாளைக்கு உனக்கு ஆப்பு தான் னு மனசு சொல்லிச்சு…. உடனே கடைக்கு போயி ஒரு புது நோட் வாங்கி எல்லா exercise எழுத ஆரம்பிச்சேன்… சரியா ராத்திரி 10 மணிக்கு மேல தான் முடுஞ்சுது…எப்படியோ பழைய நோட் மாதிரி Pack பண்ணிட்டேன் … இப்ப என்ன problem na .. சார் வோட sign என் நோட்ல போடணும்..! எனக்கு போட பயமா இருந்துச்சு…! சரி இப்போ அப்படியே விட்டு நாளைக்கு பாத்துக்குவோம்….. எக்ஸாம்க்கு படிக்க ஆரம்பிப்போம் னு அந்த புக் எடுத்து படிக்க ஆரபிக்கிறேன் அப்பத்தான் அம்மா டிவி போட்டு சீரியல் பாக்கணுமா.. ! அட கடவுளே ….! 2 மணிநேரம் நா என்ன படிச்சேன் னு எனக்கே தெரியல …!
நல்ல மழை பெஞ்ச பிறகு விடியிற பொழுத பர்த்திருக்கிங்கலா? மண் வாசனவோட சூப்பர் view இருக்கும்…!

காலைல ஸ்கூலுக்கு போன பிறகு எல்லார்ருகிட்ட சொன்னேன்…! அவங்க என்ன பயமுறுத்த ஆரபிசாங்க … " டேய்..! நம்ம Physics சார் பயகரமான ஆளுடா..! நீ இனைக்கு நல்லா வாங்கி கட்டிக்க போற.. ..! "

வழக்கம் போல நம்ம சார் லேட்டா தான் வந்தாரு .. எல்லாரும் அவங்க அவங்க நோட்ட submit பண்ணாங்க… நான் கடைசியா என் நோட்ட சார் முன்னாடி நீட்டினேன்… " சார்..! எ எ என் நோ நோட்டு …. ச ச sign போடுங்க….!"
அப்ப அவன் பார்த்த பார்வை இருக்கே…. எப்பா… நா ஸ்கூல் விட்டு ஓடியே போகலாம்னு இருந்துச்சு…! இந்த சார் பயலுக எப்பவுமே இப்படித்தான்..! என்ன? ஏது? னு கேட்காமலே அடிக்க ஆரம்பிச்சுருவாங்க..!

அப்பறமா அந்த சார் என் தலைல டிரம்ப்ஸ் வாசிச்சது.. குனியா வச்சு என் முதுகுல குத்துனது வேற கதை..!

இப்படித்தான் மழை என்ன வாழ்கையில் என் சின்ன வயசுல சின்ன பிள்ள தனமா விளையாட ஆரம்பிச்சுது…

இந்த மழை என் காலேஜ் life'ல கூட என்ன விடல….! அந்த கதைய அப்பறம் எழுதுகிறேன்…!

No comments:

Post a Comment